Audiobook
We may earn a commission. Learn more.
Natchathira Athisayangalum Marmangalum
பிரபஞ்சம் பற்றி நமது மஹரிஷிகள் அறியாத விஷயமே இல்லை. அவற்றில் ஒன்று நட்சத்திர மர்மங்கள். இவற்றை எளிதாக புராணக் கதைகளாகவும், கவிதைகளாகவும் அவர்கள் நமக்கு வழங்கினர். அத்தோடு மட்டுமின்றி மனித குலத்தின் மீது அவர்களுக்குள்ள எல்லையிலாக் கருணையினால் மனித வாழ்வில் ஏற்படக் கூடிய கஷ்டங்களைப் போக்க உரிய வழிகளையும் காட்டினர். இதில் முக்கியமான ஒன்று பரிகாரங்கள். நட்சத்திரம் சம்பந்தமான வழிபாடு, பரிகாரம் ஆகியவற்றை அவர்கள் மிகத் தெளிவு பட வழி வழியாகக் கற்பித்தனர். அன்னிய ஆட்சியால் நாம் இழந்த பலவற்றுள் இந்த நட்சத்திர வித்யாவும் ஒன்று. இந்த நூலில் ஏராளமான நட்சத்திர அதிசயங்களையும் அறிவியல் செய்திகளையும் காணலாம். நூலில் உள்ள சில அத்தியாயங்களின் தலைப்புகள்: பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்!, காமனை எரித்த சிவனின் நட்சத்திரம் திருவாதிரை!, கார்த்திகை மைந்தா கந்தா சரணம்!, பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்... அந்த நாளும் வந்திடாதோ!, வானில் ஒரு மாபெரும் மஹாபாரதப் போர்!, வானில் நாம் காணும் அர்ஜுனனும் திரௌபதியும்!, ஒன்பது கோடி சூரியன்களை தனக்குள் அடக்கக்கூடிய அதிசய கேட்டை நட்சத்திரம்!, சப்த ரிஷி மண்டல அதிசயங்கள்!, வானத்தில் ராமாயணக் காட்சிகள், அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!, வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்!, அதிசயமான அகத்திய நட்சத்திரம்!, அஸ்வினி ரஹஸ்யம்!, நிலவைக் கவர்ந்த ரோஹிணி!,விண்ணிலே வீணை மீட்டும் சரஸ்வதியும், பிரம்மாவும்!, ஆரோக்கியம் அருளும் சதயம், ரேவதி ரஹஸ்யம் நலம் தரும் நட்சத்திர சூக்தம்!
Reviews
No reviews yet.
Be the first to write one.
Highlights
No highlights yet.
Be the first to share one.