
சிவகாமியின் சபதம் / Sivagamiyin Sabadham
"பல்லவ சரித்திரம் உள்ளவரை கற்பனைப் பெண்ணான சிவகாமியும் இருப்பாள். செம்மொழி உள்ளவரை சிவகாமியின் சபதம் வாழும். இதைவிடச் சிறந்த சரித்திர நாவல் தமிழில் எழுதப்பட்டதில்லை. கல்கியின் மிக முக்கியமான நாவல்களுள் ஒன்றாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் சிறந்த நாவல்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது சிவகாமியின் சபதம். அது எழுதப்பட்ட நாளில் எந்தவகையான உணர்வலைகளை எழுப்பியதோ, அதே உணர்ச்சிகளை இன்று முதன்முதலாகப் படிப்பவர்களிடத்தும் ஏற்படுத்துவதுதான் இந்நாவலின் தன்னிகரில்லாத வெற்றி எனலாம். கல்கியின் குழப்பமற்ற இனிமையான தமிழும், சித்திரங்களாக விரியும் காட்சிகளுமே இந்த வெற்றிக்குக் காரணம். தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய அற்புதமான சரித்திர நாவல் இது."